நீர்கொழும்பு கடற்பரப்பில் 180 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு

Published By: Vishnu

04 Jan, 2021 | 12:58 PM
image

இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடற்பரப்பில் 180 கிலோ கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளதுடன், இதன்போது நான்கு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

அதன்படி 100 கிலோ கிராம் ஐஸ் எனப்படும் போதைப்பொருள், 80 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக டிசில்வா தெரிவித்தார்.

இதன்போது நான்கு சந்தே நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்திய படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதானவர்கள் சிலாபத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நேற்றிரவு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம், புலனாய்வு சேவை மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் கடற்படை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக நடவடிக்கைகளுக்காக கைதான சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09