அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவின் உயர்மட்ட தேர்தல் அதிகாரியிடம் மாநில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவர் இணங்கவில்லை என்றால் "ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
ஜோர்ஜியாவின் வெளியுறவு அமைச்சர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருடன் ட்ரம்ப் ஒரு மணிநேரம் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடல் ஒன்று கசிந்த நிலையில் அதனை ஆதாரம் காட்டி வொஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
வெளியான தேர்தல் முடிவுகளினால் ஜோர்ஜியா மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அதனால் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்குமாறும் ட்ரம்ப் பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் இந்த உரையாடலில் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஜோர்ஜியாவில் ஜோ பைடன் 11,779 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சனிக்கிழமையன்று முன்னெடுத்த தொலைபேசி உரையாடலின் போது, ஜோர்ஜியாவில் தேர்தல் முடிவுகளை முறியடிக்க ட்ரம்ப் முயற்சிகளைத் தொடர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.
2020 நவம்பர் மூன்றாம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியின் பின்னரும், ட்ரம்ப் அவரது தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். ட்ரம்பின் பல மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.
ஜோர்ஜியா ஏற்கனவே பல தணிக்கைகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்திருந்ததுடன், பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியும் உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM