இன்று (04) காலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் அமுல்படுத்தப்பட்டும் பிரதேசங்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களை தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக முன்னெடுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டம்
01. ஜனவரி மாதம் 04 ஆம் திகதி (இன்று) அதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்
பொலிஸ் பிரிவு
• மோதர (முகத்துவாரம்) பொலிஸ் பிரிவு
கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வாழைத் தோட்டப் பொலிஸ் பிரிவில் அலுத்கட மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அலுத்கட கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
• மிரிஹானை பொலிஸ் பிரிவில் தெமலவத்த (பிடகோட்டே)
கம்பஹா மாவட்டம்
01 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி (இன்றுஅதி காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்
பேலியகொட பொலிஸ் பிரிவு
• பேலியகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
• மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
• பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹன விகார மாவத்த
• பேலியகொட கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லிகாஹவத்த மற்றும் புரணகொடுவத்த (Pooranakotu Waththa)
கிரிபத்கொட பொலிஸ் பிரிவு
• விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்த
இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் , இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேலும் அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM