(எம்.மனோசித்ரா)
நாட்டில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பகுதிகள் அபாயமற்றவையாக இனங்காணப்படும் போது அவ்வாறான பகுதிகள் வாராந்தம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இதுவரை 403 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் நாளை திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் விடுவிக்கப்படும் பகுதிகள்
கொழும்பு மாவட்டத்தில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவும் , வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் , பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவில் தெமலவத்தை (புறக்கோட்டை) என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.
கம்பஹாவில் விடுவிக்கப்படும் பகுதிகள்
கம்பஹா மாவட்டத்தில் பேலியகொட பொலிஸ் பிரிவில் பேலியகொடவத்தை கிராம சேவகர் பிரிவு, மீகஹாவத்தை கிராம சேவகர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவும் றோஹண விகாரை மாவத்தையும் , பேலியகொட கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நெல்லகஹாவத்தை மற்றும் பூரண கொட்டுவத்தை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதே வேளை விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை பகுதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுகிறது.
இவை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மறு அறிவித்தல் வரை அவ்வாறே காணப்படும் என்றும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணி வரை 403 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 774 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 41 031 தொற்றாளர்கள் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர்.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 37 252 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 7311 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM