(செ.தேன்மொழி)
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கமைய இதுவரையில் 13 ஆயிரத்து 137 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது 103 கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை முன்னெடுக்கப்படும். அதற்கமைய நேற்று மாத்திரம் 108 அன்டிஜன் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது ஒருவருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை 13 ஆயிரத்து 137 அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்றாளர்களுடன் நெருங்கி பயணித்ததாக அடையாளம் காணப்பட்ட 604 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல்மாகாணத்தில் காணப்படும் மீன் சந்தைகளிலும் தற்போது அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நேற்று மீன்சந்தை ஒன்றில் 23 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 180 பேருக்கு இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் மூன்று பேருக்கு மாத்திரமே வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM