யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டில் இளம் பெண்ணின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் பகுதியில், இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த சிசுவை மண்ணுக்குள் புதைத்தமை தொடர்பில் சம்பவ இடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சிசுவின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
அரியாலை, புங்கங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திலிருந்தே குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் குருதிப்போக்குக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்துள்ளமை தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதுதொடர்பில் இளம் பெண்ணின் வீட்டுக்கு நேற்றுச் சென்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்போது சிசு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. சிசுவின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு முன்னெடுக்கப்பட்டது. உயிருடன் பிறந்த சிசு மூக்கு மற்றும் கழுத்துப் பகுதியில் அழுத்தப்பட்டதால், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சிசுவின் தாயாரான இளம் பெண், தனக்கு குழந்தை பிறந்தமை தெரியாது என்று ஆரம்ப விசாரணையில் தெரிவித்த நிலையில் அவரின் தாயாரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
அதனையடுத்து, இளம் பெண்ணின் தாயார் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM