இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு உயர்தர பயிற்சிகள் வழங்கி அவர்களின் தொழிற்றுறை முன்னே ற்றப்பட வேண்டும். விசேடமாக பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களின் செய்தி அறை கோழிக்கூட்டைப் போன்று உள்ளது.
அதனை விஸ்தீரணப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் ஜே.வி.பி. எம்.பி. டாக்டர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் அரச அச்சகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அச்சகமாக இயங்கியது எனவே இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாராளுமன்ற அலுவல் கள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்களின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போது டாக்டர் நளின்த ஜயதிஸ்ஸ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறை கோழிக்கூடுகளை போன்றும் ஒரு ரியூசன் வகுப்பறையை போன்றும் நெருக்கடியாக இருக்கின்றது.
எனவே அவ் ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறைகள் விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு பிரதேச ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக தொழில் புரிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும். அவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும். சில ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளால் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றனர். அதேவேளை சுயாதீனமாக செயற்படும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் அரசாங்க அச்சகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகமாக இயங்கியது. அக்கட் சிக்காக பல ஆவணங்கள் அச்சிடப்பட்டமை இவ்வாறான செயற்பாடுகளுக்காக ரூபா.30 இலட்சம் அரச அச்சகத்திற்கு செலுத்தப்பட
வேண்டியுள்ளது.
எனவே இம்மோசடி தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண் டும். செலுத்த வேண்டிய தொ கையை
அறவிட வேண்டும். இல்லாவிட் டால் அதே பயண த்தை இந்த அரசு முன்னெடுக்க முனைந்ததாகவே அது அமையும் என்றும் நளிந்த ஜய திஸ்ஸ எம்.பி. தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM