தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியே செல்லுதல், உட்பிரவேசித்தல் தண்டனைக்குரியது - அஜித் ரோஹண

Published By: Gayathri

02 Jan, 2021 | 12:35 PM
image

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியதாக இதுவரையில் 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 1900 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பில் ஆறு பொலிஸ் பிரிவுகளும், அவிசாவளை, ருவன்வெல்ல மற்றும் காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 கிராம சேவகர் பிரிவுகளும், வீதி ஒழுங்கைகளும், சில தொடர்மாடி குடியிருப்புகளும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், அத்தியாவசிய தேவையின்றி அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு பிரதேசங்களுக்கு செல்வதோ, வெளிப்பிரதேசங்களில் இருப்பவர்கள் அந்த பிரதேசங்களுக்கு வருகைத்தரவோ அனுமதி வழங்கப்பட மாட்டாது. அவ்வாறு எவரேனும் சென்றால் அது தண்டனைக்குரிய குற்றச் செயற்பாடாகும்.

அதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசித்துவரும் மக்கள் தொடர்ந்தும் தங்களது பிரதேசங்களில் இருப்பதுடன், உரிய சுகாதார சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும். 

அதற்கமைய அந்த பிரதேசங்களிலிருந்து மேலும் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்த பகுதிகளை விடுவிக்க முடியும்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுள் முக்கிய விதிமுறைகளான, முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் ஆகிய சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷ

அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர்களுள் 1900 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பன்டுள்ளதுடன், மேலும் சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01