(செ.தேன்மொழி)
நாட்டின் நான்கு வேறுபட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பெண்ணொருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
எல்ல
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் சாரதி உட்பட இருவர் பயணித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றைய நபரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கட்டுவன
கட்டுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மித்தனிய - வலஸ்முல்ல வீதியில் சாரதி உட்பட நால்வர் பணித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,வீதியை விட்டு விலகிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதுடன்,பின்னர் அருகிலிருந்த மின்கம்பத்தின் மீதும் மோதி விபத்நு ஏற்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த சாரதியும்,பயணிகள் மூவரும் சிகிச்சைக்காக எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பன்னல
பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல - குளியாப்பிட்டி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற டிப்பர் ரக வாகனமொன்றை முன்னோக்கி செல்ல முற்படும்போது எதிர் திசையில் வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
யக்வில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறக்குவானை
இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பிலிபிட்டி - இரத்தினபுரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன று பாதசாரதி பெண்ணொருவரின் மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேற்படி விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM