(எம்.மனோசித்ரா)
உலக நாடுகள் பலவற்றில் தற்போது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவியுள்ளதா என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் உயிரியல் பிரிவு இந்த பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.
இதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் மேற்கொள்ளப்படும் பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இந்த உருமாறிய வைரஸ் அடங்கக்கூடிய தொற்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு உலகம் முழுவதிலும் பரவிவரும் இந்த உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிவதற்கு தனியான விசேட மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த உருமாறிய வைரஸ் இங்கிலாந்தில் முதலில் இனங்காணப்பட்டது. இது தற்போது பல நாடுகளிடையே பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது. பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் அறிந்துக்கொள்ள முடியாது என்று கூறுவதற்கில்லை.
இதுதொடர்பில் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. இருப்பினும், பொதுவான பி.சீ.ஆர் பரிசோதனையில் இதனை வேறுப்படுத்தி அடையாளம் காண முடியாது.
இந்த உருமாறிய வைரஸை அடையாளம் காண்பது இலங்கை போன்ற நாடுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை தேவைக்கேற்ற வகையில் சுகாதார பிரிவினர்களினால் தனிமைப்படுத்தப்படுவர். சரியான சுகாதார நடைமுறைகளை பயன்படுத்தி தொற்று பரவலை தடுக்க முடியும்.
தற்போதுள்ள நிலைமையில் இதுதொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும் ஒரு பிரச்சினை உண்டு. பொதுவாக நாம் பி.சீ.ஆர் பரிசோதனையில் குறிப்பிட்ட இலக்குடன் செயல்படும் போது அந்த இலக்கு சிலவேளை தவறக்கூடும். இதனால் பி.சீ.ஆர் பரிசோதனையின் மூலம் இதனை கண்டறிய முடியாது என்று திட்டவட்டமாக கூறமுடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM