மாகாண சபைகளை மீண்டும் நிலைபெறச்செய்ய வேண்டும் - சுதந்திரக் கட்சி பரிந்துரை

Published By: Digital Desk 4

31 Dec, 2020 | 05:46 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மாகாணசபை தேர்தலை நடத்தும் வரை மாகாணசபைகளை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக கட்சியின் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஆதரவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி |  Virakesari.lk

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று மாலை கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் கூடியது. 

கூட்டம் நிறைவடைந்த பின்னர் அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியல் நிலைவரம் மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட கட்சி மத்திய செயற்குழு கூட்டப்பட்டது. இதன்போது விசேடமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க  கட்சியில் இருந்து குழுவொன்றை நியமிக்க கட்சி தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய புதிய அரசியலமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. 

மேலும் மாகாணசபை தேர்தல் இடம்பெறாமல் இருந்துவருவதால் பல வருடங்களாக மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்போயிருக்கின்றது. 

அதனால் மாகாணசபை தேர்தலை நடத்தும்வரைக்கும் கலைக்கப்பட்ட மாகாணசபைகளை மீண்டும் செயற்படுத்தி, மாகாணசபை உறுப்பினர்கள் தொழிற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பிரேரணை ஒன்றை அரசாங்கத்துக்கு முன்வைக்க தீர்மானித்திருக்கின்றோம்.

அத்துடன் மாகாணசபை செயற்பட்டு மாகாண சுகாதார அமைச்சர்கள் இருந்திருந்தால் தற்போதைய கொவிட் நிலைமையை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடிந்திருக்கும் என்றே நாங்கள் நம்புகின்றோம். 

அதனால் தேர்தல் இடம்பெறும்வரைக்கும் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என்பதே எமது பிரேரணையாகும். இதனை அரசாங்கத்துக்கு தெரிவிக்க இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01