மா அரைக்கும் இயந்திரத்தில் கூந்தல் சிக்கியதில் பெண் பரிதாபமாக பலி

Published By: Digital Desk 4

31 Dec, 2020 | 04:36 PM
image

பொலன்னறுவை வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவில் தனது வீட்டில் சுயதொழிலுக்காக பொருத்தப்பட்டுள்ள மா அரைக்கும் இயந்திரத்தில் தவறுதலாக கூந்தல் சிக்கிக் கொண்டதில் பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் வெலிக்கந்தை மஹிந்தாகம கடவத்தமடு கிராமத்தில் வசிக்கும் சந்திரிகா (வயது 39) எனும் பெண்ணே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வழமைபோன்று குறித்த பெண் மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது கூந்தல் தவறுதலாக மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

அதனால் அவர் இயந்திரத்தினால் பலமாகச் சுழற்றப்பட்டு ஸ்தலத்திலேயே இறந்துள்ளார்.

தனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ்ந்து வரும் திருமணமாகாத இந்தப் பெண் தனதும் தாயினதும் வாழ்வாதாரத் தொழிலாக இவ்வாறு  மா அரைக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40