(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் கடந்த 11 நாட்களில் விபத்துகளில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக கடந்த 11 நாட்களில் 1,398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் 613 வீதி மற்றும் வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் சிக்கி 132 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 291 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் நாளொன்றுக்கு ஐவர் என்ற அடிப்படையில் இவ்வாறு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பிருந்தும் கவனக்குறைப்பாட்டின் காரணமாக அதனை தவிர்த்துக் கொள்ள முடியாமல் போயுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தரவுகளுன் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு தரவுகள் கிடைக்கப்பெறாத விபத்துக்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
மோட்டார் வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கைகளுக்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்காக இன்றுகாலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த 11 நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 1,398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM