2021ஆம் புதிய ஆண்டு பிறக்கையில், இப்புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் இப்புதிய ஆண்டு, இறை ஆசீரையும் மன மகிழ்சியையும், பாதுகாப்பையும் தரும் ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம் என யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையானது, ஆண்டின் முதல் தினத்தை தேவ அன்னையின் தினமாகப் பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் ஆண்டு முழுவதிற்குமான அன்னையின் விசேட ஆசீரைப் பெற பணித்து நிற்கிறது. இறைவனின் அன்னை மரியாள் தாய்க்குரிய அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும் பாதுகாத்து எத்தீங்குமின்றி வழிநடத்தி எம் அனைத்துத் தேவைகளிலும் எம்மை நிறைவு செய்வாராக.
கடந்த ஆண்டு பல இன்ப, துன்ப அனுபவங்களை நாம் பெற்று ஏற்றுக்கொண்டுள்ளோம். வருகின்ற புதிய ஆண்டிலும் இறைவன் தர இருக்கின்ற இன்ப துன்ப அனுபவங்களை இறை சித்தமாக ஏற்றுக் கொள்வோம்.
2020ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு துன்பமிக்க ஆண்டாகவே கடந்து சென்று உள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் முடிவில்லாமல் கொரோனா தொற்று போய்க்கொண்டே உள்ளது. அதனைவிட இன்னும் வேறு வகை கொரோனா பரவுகிறது என்ற செய்தி பயமூட்டுவதாகவே உள்ளது. எமது கிறஸ்மஸ் செய்தியில் தெரிவித்த கருத்தை திரும்பவும் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம். இறைவன் உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிராத்தியுங்கள். செபத்தால் மட்டுமே இந்த தொற்றுநோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறைவேண்டுதல் செய்யுங்கள்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையும் அரசியல் கைதிகள் விடயமும் இன்னும் அரசால் தீர்க்கப்படாமலும் கவனிக்கப்படாமலும் உதாசீனம் செய்யப்பட்டும் வருவது வேதனைக்குரியது. ஆரசியல் தலைவர்களும் சம்பந்தப்பட்டவர்களும் இந்த விடயத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அரசை செயற்பட வலியுறுத்த வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.
2021ஆம் புதிய ஆண்டு அனைவருக்கும் இறை ஆசீரையும் மன மகிழ்வையும் பாதுகாப்பையும் தரும் ஆண்டாக அமையட்டும் என இறையாசீர் வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM