(நா.தனுஜா)
உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலுக்கான உறுதியான காரணம் என்பதை வெளிப்படுத்துவதற்கான விரிவான விசாரணைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.
கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர்நீதிமன்ற கட்டடத்தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலுக்கு, எரிபொருள் வீச்சோ அல்லது மின்கசிவோ காரணமில்லை என்று உறுதியாகியிருப்பதாக அரச இரசாயனப்பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்விடயம் தொடர்பில் மேலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இம்மாத ஆரம்பத்தில் உயர்நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் மேலும் விரிவானதும் விரைவானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மின்கசிவின் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்பதை பொலிஸார் நிராகரித்திருந்தாலும், நாட்டின் மீயுயர் நீதிமன்றமொன்றில் ஏற்பட்ட இந்தத் தீப்பரவலுக்கு உண்மையான காரணம் என்னவென்பதை அவர்களால் கண்டறிய முடியாமல் போயிருக்கின்றது.
தனியொரு நபர் சிகரெட்டை புகைத்துவிட்டு, அதனை முறையாக அணைப்பதற்குத் தவறியமையின் விளைவாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்தாலும், அதனையும் அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
உயர்நீதிமன்றம் உயர்பாதுகாப்பு வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட தீப்பரவலால் அங்கிருந்த ஆவணங்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவானது. ஆகவே தீப்பரவலுக்கான உறுதியான காரணம் என்னவென்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM