பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொவிட்-19 கொரோனா வைரஸின் புதிய வகை அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
கொலராடாவில் முதலாவதாக 20 வயதுடைய ஒரு நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இவரது பயணவிவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கொலராடோ மாநில ஆய்வகம் புதிய வகை வைரஸ் மாறுபாட்டை அந்த நபருக்கு உறுதிப்படுத்தியதுடன், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ச்சியான தொற்றுநோய்களுக்கு மத்தியில், இங்கிலாந்தில் முதன்முதலில் காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது மற்ற SARS-CoV-2 வகைகளை விட அதி வேகமாகப் பரவக்கூடியதாகக் கூறப்படுகிறது.
இந்த திரிபுநிலைக்குள்ளான புதிய வகை கொரோனா தொற்று தற்போது உலகெங்கிலும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்களின் படி, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் 337,829 பேர் உயிரிழந்துள்ளதோடு, 19,521,613 பேர் தொற்றுக்குள்ளாாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM