(செ.தேன்மொழி)
நாட்டின் மூன்று வேறுப்பட்ட பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டதெனியாவ, மாத்தறை மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மேற்படி விபத்துகள் தொடர்பில் சாரதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டதெனியாவ
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீறிகம - திவுலப்பிட்டி வீதியில் மீறிகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுடன் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் ஒருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பதுராகொட பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தின் போது காயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
மாத்தறை
மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கற்கள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் வேலைத்தளம் ஒன்றில் கற்களை ஏற்றிக்கொண்டு செல்லமுற்பட்ட டிப்பர் ரக வாகனம் ஒன்று , திடீரென பின்னால் பயணித்தமையால் டிப்பர் வாகன சாரதியின் உதவியாளர் மோதுண்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கெக்கனதுர பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அங்குணுகொலபெலஸ்ஸ
அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது படுகாயமடைந்த சைக்கிளின் ஓட்டுனர் அங்குணுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கட்டுவன பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM