ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பின் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி முதல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படக்குழுவில் இருந்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதிலும் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
இதற்கிடையே ரஜினிகாந்தின் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 25 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவருடைய உடல்நலம் நன்கு தேறியுள்ளது. 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் வைத்தியசாலையில் இருந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், அடிக்கடி இரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொண்டு, ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும். உடல் ரீதியான குறைந்தபட்ச செயல்பாடு இருக்கவேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.இந்த நிபந்தனைகளோடு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் தவிர்க்கவேண்டும் என்று ரஜினிகாத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் துவங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்படும் என்றும், பொங்கல் விடுமுறைக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுபோல் திட்டமிட்டபடி 31 ஆம் திகதி புதிய கட்சியை ரஜினிகாந்த் அறிவிப்பாரா? என ரஜினி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM