வெயாங்கொடவில் இன்று காலை பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் பல குற்றங்களுடன் தொடர்புடைய 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 19 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸ் அதிகாரிகள் இன்று காலை குறித்த நபரை வெயாங்கொடவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் ஏற்பட்ட ஒரு மோதல் சம்பவம் காரணமாக அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சந்தேக நபர் மீது மூன்று வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கம்பாஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM