பொலிஸ் காவலிலிருந்த நபர் மோதலால் உயிரிழப்பு

Published By: Vishnu

28 Dec, 2020 | 08:17 AM
image

வெயாங்கொடவில் இன்று காலை பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் பல குற்றங்களுடன் தொடர்புடைய 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 19 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

பொலிஸ் அதிகாரிகள் இன்று காலை குறித்த நபரை வெயாங்கொடவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் ஏற்பட்ட ஒரு மோதல் சம்பவம் காரணமாக அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபர் மீது மூன்று வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கம்பாஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11