கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வீட்டிலிருந்து தப்பியோடிய நிமேஷ் மதுசங்க எனும் 22 வயதுடைய இளைஞன் அப்பிரதேசத்திலேயே ஒரு வீட்டினுள் இருந்த போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞன் சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகொல பகுதியில் தனது வீட்டிலிருந்த நிலையிலேயே தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த இளைஞன் அண்மையில் மஹர சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், அவரை வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், அவரிற்கு சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரை ஒரு சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றிருந்தபோது அவர் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்தார். இந்நிலையிலேயே அவர், அப்பிரதேசத்திலேயே ஒரு வீட்டினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தப்பியோடிய குறித்த, இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM