கடந்த மாதம் விபத்தில் காயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தெட்சணாமூர்த்தி கோபிதாஸ் குடும்பத்தினரை நேற்று சந்தித்த சசிகலா ஒரு இலட்சம் ரூபா நிதியை கையளித்தார்.
தெட்சணாமூர்த்தி கோபிதாஸ் சிறுவயதில் தாயை இழந்தவர். சகோதரர் ஒரு மாவீரர். 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கோபிதாஸ், சிறையில் இருந்து 2019 ஆம் ஆண்டே விடுதலையானவர் தடுப்பில் இருந்த போது கொடிய சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்.
கடந்த நவம்பர் மாதம் முதல் வாரம் பாணந்துறையில் விபத்தொன்றில் படுகாயமடைந்து பாணந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆயினும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மீண்டும் பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் அவரது உடல் பாணந்துறை வைத்திய சாலையிலிருந்து அவரது சொந்த இடமான முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விநாயகபுரம் துணுக்காய்க்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந் நிலையில் அமரர்.தெட்சணாமூர்த்தி கோபிதாஸ் குடும்பத்தினரை நேற்று சந்தித்த சசிகலா ரவிராஜ், மாமனிதர் இரவிராஜ் ஞாபகார்த்த மன்றத்தின் சார்பில் ரவிராஜ், மாமனிதர் இரவிராஜ் ஞாபகார்த்த மன்றத்தின் சார்பில் 50,000 ரூபாவையும் தொழிலதிபர் சிறி இராசமாணிக்கம் சார்பில் 50,000 ரூபாவையும் கையளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM