உரிய வயதெல்லை பூர்த்தியாகாதவர்களுக்கு வாகனங்களை வழங்குவோருக்கான முக்கிய அறிவித்தல்: பொலிஸ்  பேச்சாளர்

Published By: J.G.Stephan

26 Dec, 2020 | 03:34 PM
image

(செ.தேன்மொழி)
சாரதி அனுமதி பத்திரம் இல்லாத மற்றும் உரிய வயதெல்லையை பூர்த்தி செய்யாதவர்களுக்கு  வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அறவிடுவதற்கும் அனுமதி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மோட்டார் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 18 வயதிற்கும் குறைந்த சிறுவர்களுக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் தங்களது வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கிவருவதாக தெரியவந்துள்ளது. இவர்கள் வினோதமான முறையிலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இது குற்றச்செயற்பாடாகும். அதனால் இவ்வாறு வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கான வாகனங்களை வழங்கி வரும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது  சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல், உரிய வயது எல்லையை பூர்த்தி செய்யாமல் வாகனங்களை செலுத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நபர்களுக்கும் வாகனங்களை வழங்கிய நபர்களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சிறைத்தண்டனை  பெற்றுக் கொடுப்பதற்கும் அல்லது 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அறவிடவும் அனுமதி உள்ளது. அதனால் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51