(ஆர்.ராம்)
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளடங்கிய வரைவினை தனியாக சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தவரைவானது தமிழ் மக்கள் பேரவை, வடமாகாணசபை ஆகியதரப்பினரால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்டங்களையும், சி.வி.விக்னேஸ்வரனினால் தயாரிக்கப்படும் வரைவினையும் மற்றும் பங்காளிக்கட்சிகளின் முன்மொழிவுகளையும் ஒன்றிணைத்து மேம்பட்டதாக இறுதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்புக்கான வரைவினை தயாரிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. அதற்காக ஐவர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரைவொன்றை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா கடந்த 22ஆம் திகதி வரையில் அவர்களுடைய அணியால் தயாரிக்கப்படும் யாப்பு தொடர்பில் இறுதியான முடிவொன்றை எடுப்பதற்கான கால அவகாசத்தினைக் கோரியிருந்தார்.
அதன் பின்னர், கூட்டமைப்பின் தலைமை மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாரிக்கப்பட்டுள்ள அவர்களின் வரைவுக்கு அங்கீகாரமளித்துள்ளதாகவும் விரைவில் அது கையளிக்கப்படவுள்ளதாகவும் பத்திரிகை செய்திகள் ஊடாக அறிய முடிந்துள்ளது.
அதேநேரம், இன்னமும் சொற்பமாக காலம் இருக்கின்ற நிலையில் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளிட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எவரும் வரைவு தயாரிப்பதுபற்றிய கலந்துரையாடலை முன்னெடுத்திருக்கவில்லை.
இதன் காரணமாக, நாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக முன்மொழிவுகள் அடங்கிய வரைவினை இறுதி செய்து சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அந்த வரைவு நிச்சயமாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாகவே அமையும். வரைவினை நிபுணத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் நாம் பகிரங்கப்படுத்துவோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM