முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 54 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,794 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக கடந்த 20 ஆம் திகதி முதல் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் போக்குவரத்து விதிமுறிகளை மீறும் நபர்களை அடையாளம் காண நாடு முழுவதும் 9,000 பொலிஸ் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்ததுடன், ஐவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சாரதி அனுமதி உரிமத்தை இரத்து செய்வதுடன் 25 ஆயிரம் ரூபா அபராதமும், சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM