(இராஜதுரை ஹஷான்)
அவிசாவெல்ல மற்றும் கொஸ்கம ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் களனி வெளி புகையிரத பாதையில் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் புகையிரதம் வக வரை செல்லும்.
களனி வெளி புகையிரத பாதையில் நான்கு புகையிரதங்கள் நிலையங்களில் புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளன என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்க பிரதான செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டு குழுவினால் அவிசாவெல்ல மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
இதற்கமைய களனி வெளி புகையிரத பாதையில் கடுகொட , கொஸ்கம மற்றும் புவக்பிடிய , அவிசாவெல்ல ஆகிய புகையிரத நிலையங்களில் புகையிரதம் மறுஅறிவித்தல் விடுக்கும் வரை நிறுத்தப்படமாட்டாது. இந்த புகையிரத நிலையங்களில் புகையிரத சேவைகள் ஏதும் முன்னெடுக்கப்பட மாட்டாது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து களனி வெளி புகையிரத ஊடாக புறப்படும் புகையிரதம் வக புகையிரத நிலையம் வரை செல்லும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM