அரபு உலகில் இஸ்ரேலுக்கும் நான்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்ட தரகர் ஒப்பந்தங்களுக்கு உதவுயமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல உயர் ஆலோசகர்களுக்கு தேசிய பாதுகாப்பு விருதுகளை புதன்கிழமை வழங்கினார்.
அதன்படி ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு பதக்கத்தை வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஓ பிரையன், மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னர், மத்திய கிழக்கு தூதர் அவி பெர்கோவிட்ஸ், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ப்ரீட்மேன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான அமெரிக்க தூதர் ஜோன் ராகோல்டா ஆகியோருக்கு வழங்கினார்.
பதக்கங்களை வாங்கிய ட்ரம்ப், இவர்களின் முயற்சிகளுக்காக நன்றிகளையும் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில், இஸ்ரேல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோவுடன் "ஆபிரகாம் உடன்படிக்கைகள்" என்று அமெரிக்கா அழைக்கும் ஒரு பகுதியாக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டது.
ஜனாதிபதி ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் திகதியுடன் முடிவடைவதற்கு முன்னர் மேலும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு பதக்கத்தை வழங்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் 1953 ஆம் ஆண்டிலிருந்து, ஒரு நிறைவேற்று உத்தரவின் கீழ், தேசிய பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்க அனுமதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM