(செ.தேன்மொழி)
முல்லேரியா பகுதியில் பாதாளகுழு தலைவரான அங்கொட லொக்காவுக்கு சொந்தமான துப்பாக்கிகள், கைக்குண்டுகள் மற்றும் மகசின்கள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செலிஹினி மாவத்தையில் நேற்று புதன்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த , ஜேர்மன் நாட்டு துப்பாக்கி, துருக்கி நாட்டு துப்பாக்கி ஒன்றும், 30 கைக்குண்டுகளை போட்டு வைக்க கூடிய மகசினொன்றும், 15 கைக்குண்டுகளை வைக்கக்கூடிய மகசின்கள் மூன்றும் மற்றும் 14 கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டவிரோத ஆயுதங்கள் இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாளகுழு தலைவரான அங்கொட லொக்காவுக்கு சொந்தமானது என்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த நவீன தரத்திலான துப்பாக்கிகள் எம் நாட்டு பாதுகாப்பு படையினரிடம் கூட இல்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM