அமெரிக்காவின், பால்ட்டிமோர் நகரில் அமைந்துள்ள பால்ட்டிமோர் எரிவாயு மற்றும் எலக்ட்ரிக் கட்டிடத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 21 கட்டுமானத் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்தினையடுத்து மீட்பு படையினர் மொத்தமாக 23 பேரை கட்டிடத்திலிருந்து மீட்டுள்ளனர். விபத்தின் போது காயமடைந்த 21 பேரை சிகிச்சைக்காக பல வைத்தியசாலைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதுடன், அவர்களில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் கட்டிடத்தின் 16 ஆவது மாடியிலேயே நடந்ததாக நகர தீயணைப்பு வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்ட்டிமோர் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் அலுவலகங்களில் நடந்த சம்பவம் கட்டுமானத்துடன் தொடர்புடையது என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபனி அன்னே வீவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தின் "காற்று கையாளுதல் மற்றும் கொதிகலன் அமைப்பு" குறித்த வேலையில் ஏற்பட்ட கையாளுகை வெடி விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
எனினும் விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வரவிருக்கும் விடுமுறை நாட்கள் காரணமாக கட்டிடம் பெரும்பாலான பகுதிகள் விபத்தின்போது காலியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM