ஏன் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின் பற்ற முடியாது  - சஜித் கேள்வி

Published By: Digital Desk 4

23 Dec, 2020 | 07:31 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட் தொடர்பான அனைத்து விடயங்களையும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரமே மேற்கொள்வதாக தெரிவிக்கும் அரசாங்கம் மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் ஏன் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்ற முடியாது என அரசாங்கத்திடம் கேட்கின்றேன். 

அனைத்து இன மக்களதும் மத உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே நாட்டை பாதுகாத்துக்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பொரளை கனத்தை மயானத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒருவர் மரணித்தால் அந்த நபரின் இறுதிச்சடங்கை அவர்களின் விருப்பத்தின்பேரில், அவர்களின் மத கலாசார அடிப்படையில் மேற்கொள்வது எமது நாட்டில் இருக்கும் அனைத்து மதத்தவர்களுக்கும் இருக்கும் உரிமையாகும்.

இன்று அரசாங்கம் விஞ்ஞானத்தை மறந்து சாஸ்திரத்தை நம்ப ஆரம்பித்திருக்கின்றது. இது பாரிய பேரழிவாகும். இதற்கு பிரதான காரணமாக இருப்பது, விஞ்ஞானம் தோல்வியுற்று, பொய், ஏமாற்று வெற்றிபெற்றிருப்பதாகும். விசேடமாக பெளத்தர்களுக்கு அவர்களின் இறுதிக்கிரியையை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்கும் மத வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும். அதேபோன்று ஏனைய மதத்தவர்களின் மத கலாசாத்துக்கு இடமளிக்கவேண்டும்.

அத்துடன் அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்றும்போது, கொராேனாவில் மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் மாத்திரம் ஏன் அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்லை பின்பற்றாமல் இருப்பதற்கான காரணம் என்ன என கேட்கின்றேன். 

உலகில் 190 நாடுகள் இதனை பின்பற்றும்போது ஏன் எமது நாட்டுக்கு மாத்திரம் அதனை செய்யமுடியாது?. பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே தூய்மையான பெளத்த சிந்தனையாகும். 

மேலும் நாட்டின் நல்லிணக்கம், ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவது, அனைத்து இன மக்களை ஒன்றிணைத்துச் செல்வதன் மூலமாகும். அங்குதான்  நாட்டின் தேசிய பாதுகாப்பு,  சுயாதீனம்  பாதுகாக்கப்படுகின்றது. அதனால் அரசாங்கம் இன,மத பேதங்கள் ஏற்படாமல் நாட்டு மக்களை மீட்டிக்கொள்ளவேண்டும். அதற்காக விஞ்ஞான ரீதியிலான தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கி சாஸ்திரங்களில் இருந்து விடுபடவேண்டும். ஒரு மதத்துக்கு மாத்திரம் அல்ல, அனைத்து மதங்களின் உரிமையும் பாதிக்கப்படுகின்றது.

அதனால் நீதியான, விஞ்ஞான ரீதியிலான உண்மைக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் தீர்மானம் எடுக்கவேண்டும். சத்தியத்துக்காக குரல் கொடுக்க நாங்கள் ஒருபோது பின்வாங்கப்பபோவதில்லை. நாங்கள் எப்போதும் அடிப்படைவாதம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே இருக்கின்றோம். அதனால் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்கள் அதனை திட்டமிட்டவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம்.

 அவ்வாறான தீர்மானம் எடுப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லை. அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பதாக தெரிவித்துக்கொண்டு  இனங்களை இலக்குவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்ப்போம். அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55