(செ.தேன்மொழி)
கம்பஹா - மல்வதஹிரிபிடிய பகுதியில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மல்வதஹிரிபிடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 8.55 மணியளவில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பட்டேபொல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபருக்கும் பிரிதொரு நபருக்கும் இடையில் கம்பி வேலி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதன்போது பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்யதேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM