கிளிநொச்சியில் ஆபத்தான பகுதிகளாக மாறியுள்ள சட்டவிரோத மணல் அகழ்வு பிரதேசங்கள்

Published By: Digital Desk 3

23 Dec, 2020 | 03:11 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தின்  பல பகுதிகளில்  தொடர்ச்சியாக இடம்பெற்ற சட்டவிரோத  மணல்  அகழ்வு காரணமாக  ஏற்பட்ட பாரிய பள்ளங்களில் தற்போது மழை நீர் தேங்கி நிற்பதனால் அவை ஆபத்தான பிரதேசங்களாக மாறியுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண நிலப்பரப்புகளாக காணப்பட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு  கண்மூடித்தனமாக இடம்பெற்று  வந்துள்ளது.

இதனை கண்டித்து அவ்வவ்போது மாவட்டத்தில் போராட்டங்களும் இடம்பெற்றன. இருந்தும் சட்டவிரோத மணல்  அகழ்வை  கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டத்தை பாதுகாக்கின்றவர்களின் ஒத்துழைப்புடனும், அதிகார மற்றும் அரசியல் தரப்பின் ஆதரவுடனும் சட்டவிரோத மணல் அகழ்வு இன்றும் இடம்பெற்று வருகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் எவ்வித சுற்றுச் சூழல் அக்கறையும் அற்றவர்களாக கண்மூடித்தனமாக மணல் அகழ்வில் ஈடுப்பட்டனர். இதன் விளைவாக பொது மக்களின் காணிகள் உட்பட இரணைமடு குளத்தின் கீழ் பகுதி, ஆற்றுப் பகுதிகளில் பாரிய குழிகள் ஏற்பட்டன. 

இவ்வாறு ஏற்பட்ட குழிகளில் தற்போது மழை நீர்  தேங்கி அவை சிறிய நீர் நிலைகள்போன்று காட்சி அளிக்கிறது. எனவே இந்தப் பிரதேசங்கள் தற்போது ஆபத்தான பகுதிகளாக மாறியுள்ளன.

பல அடிகள் ஆழம் கொண்ட பள்ளங்களாக நீர் நிரம்பி காணப்படுவது கால்நடைகள், மற்றும் மனிதர்களுக்கு  உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பொது மக்கள் சாதாரணமாக பழைய நினைவுகளில் இப் பகுதிகள் ஊடாக செல்கின்ற போது அவை உயிர்  ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதேச பொது மக்களால் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57