இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று அதிகாலை டீசல் லொறி மோதி கார் தீப்பிடித்ததில் 5 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு லொறி டீசல் ஏற்றி சென்று கொண்டிருந்துள்ளது. அவ்வேளை திடீரென கட்டுப்பாட்டை இழந்த லொறி, லக்னோவில் இருந்து ஆக்ரா சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில், கார் உடனே தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதில் காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
எனினும், காருக்குள் இருந்த 5 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டதும் லொறி சாரதி தப்பி ஓடி சென்றுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM