லொறி மோதி கார் தீப்பிடித்ததில் 5 பேர் பலி - இந்தியாவில் சம்பவம்

Published By: Digital Desk 3

23 Dec, 2020 | 10:27 AM
image

இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று அதிகாலை டீசல் லொறி மோதி கார் தீப்பிடித்ததில் 5 பேர் உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு லொறி டீசல் ஏற்றி சென்று கொண்டிருந்துள்ளது. அவ்வேளை திடீரென கட்டுப்பாட்டை இழந்த லொறி, லக்னோவில் இருந்து ஆக்ரா சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில், கார் உடனே தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதில் காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.

விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

எனினும், காருக்குள் இருந்த 5 பேரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டதும் லொறி சாரதி தப்பி ஓடி சென்றுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17