முஸ்லிம்களின் ஜனாசா விவகாரம்: அரசியல் ரீதியான பிரவேசத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் - ஜே.வி.பி

Published By: Digital Desk 3

23 Dec, 2020 | 09:38 AM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் விவகாரத்தில் அரசாங்கம் அரசியல் ரீதியிலான பிரவேசரத்தை துரிதமாக கைவிட்டு , விஞ்ஞான சுகாதார தொழிநுட்ப ரீதியில் அதனை அனுக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

முஸ்லிம் ஜனாசாக்களின் விவகாரத்தில் அரசியல் ரீதியாக அனுகாமல் விஞ்ஞான சுகாதார தொழிநுட்ப ரீதியில் அனுக வேண்டும். இது அரசியல் வாதிகளால் தீர்மானிக்கப்படக் கூடிய விவகாரம் அல்ல. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே இவ்விடயத்தை வைத்து அரசியலில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக அரசியல் பிரவேசத்தை கைவிட வேண்டும். இது வரையில் சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் போதாதென்றால் , மேலும் பலரது நிலைப்பாடுகளையும் பெற்று உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் இவ்விடயம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனை அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் அலி சப்ரியும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை தாக்குதல் சம்பவம்

இது மிகவும் கவலைக்குரியது. கைதிகள் யாரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால் இறந்தவர்களின் பிரேத பரிசோதனையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு தற்போதைய அரசாங்கத்திற்கு புதிதல்ல. ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் துப்பாக்கிச்சூடுகளை நடத்தும் செயற்பாட்டை அரசாங்கம் ஆரம்பித்துவிட்டது.

உயர்நீதிமன்ற கட்டட தீப்பரவல்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருந்த போது , உயர்நீதிமன்ற கட்டட தொகுதி தீப்பற்றியுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக வழங்கப்படவுள்ள ஏதாவதொரு தீர்ப்பை திசை திருப்ப முயற்சிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பொருளாதாரம்

அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டுக்கான வருமானம் 1,555 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் 1,854 பில்லியன் ரூபா கடன் மற்றும் வட்டி மீளச் செலுத்தப்பட வேண்டியுள்ளது. கடன் மற்றும் வட்டியை மீளச் செலுத்த அரச வருமானம் போதுமானதாக இல்லை. இந்த சுமை முழுவதும் வெவ்வேறு வழிகளில் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

சீனிக்கான வரி குறைக்கப்பட்டு , வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபாவாகவும் , மொத்த விற்பனையாளர்களின் விற்பனை விலை 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த விலைக்கு மக்களுக்கு சீனி வழங்கப்படவில்லை. அவ்வாறெனில் அதன் பயன் யாரைச் சென்றடைகிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபா வருமானம் நீங்கியுள்ளது. இவ்வாறான நிலையில் கொவிட் தடுப்பிற்கான தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் உலக வங்கியிடம் 10 பில்லியன் கடன் கோரியுள்ளது.

சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ள போதிலும் , தனியார் நிறுவனமொன்றுக்கு 5 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது. இந்த தனியார் நிறுவனம் இது மாத்திரமின்றி அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளால் மேலும் பல பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது.

எரிபொருள் , மின்சாரம் மற்றும் நீர் என்பன அரசாங்கத்தினாலேயே மக்களால் வழங்கப்படும். ஆனால் எமது நாட்டில் இவற்றிலுள்ள மோசடிக்காரர்களால் தனியார்துறைகளில் இலாபத்திற்கேற்ப மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மின்சாரத்துறையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தியதால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32