(இராஜதுரை ஹஷான்)
அரசியல் காரணிகளை அடிப்படையாக கொண்டு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க இடமளிக்க முடியாது. பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க எடுத்த தீர்மானத்துக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை என மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனுருத்த சோமதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்சாரசபையின் முறையற்ற நிர்வாகத்தினால் 300 பில்லியன் ரூபா நட்டம் இதுவரையில் ஏற்பட்டுள்ளது.இதற்கு ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். மின்சார சபையின் பலவீனமான நிர்வாக தன்மையை மறைக்க பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க முயற்சிப்பது நியாயமற்ற செயற்பாடாகும்.
மின்சாரத்துறையில் இடம்பெற்ற பல மோசடிகளை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு வெளிக் கொணர்ந்துள்ளது. முறைக்கேடுகளுடன் தொடர்புடைய பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க விரைவில் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எவ்வித அடிப்படை காரணிகளும் கிடையாது. உரிய காரணத்தையும் அரசாங்கம் இதுவரையில் அறிவிக்கவில்லை.
பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்கினால் மின்சாரத்துறையில் பல மோசடிகள் இடம் பெறும். இதனால் பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள். பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM