மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள மரப்பாலம் குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற இளைஞன் மூழ்கிப் பலியானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மட்டக்களப்பு, கொக்குவில், சுவிஸ் கிராமத்தை சேர்ந்த அன்டன்ராஜ் விதுஷன் (18) என்பவரே குளத்தில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
சுவிஸ் கிராமத்தில் இருந்து மரப்பாலத்திலுள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை மாலை மரப்பாலம் குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்று நீராடிக் கொண்டிருந்தபோது இவர் சேற்றில் மூழ்கியுள்ளார்.
சக நண்பர்களும் உதவிக்கு விரைந்தோரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் அவரைக் காப்பாற்ற முடிந்திருக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் சடலமாகவே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM