(செ. தேன்மொழி)
பொது போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப்பிறப்பிற்கு இன்னும் சில தினங்களே காணப்படுகின்றன. நாட்டில் டிசம்பர் 20 முதல் 5 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. அதேபோன்று ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி மற்றும் 20 ஆம் திகதிகளிலும் அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.
பண்டிகைக்காலம் என்ற போதிலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வீதி விபத்துகளை குறைப்பதற்காகவும், தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றதா? என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதற்காகவும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள், அதிக வேகமாகவும், வீதி சமிஞ்சைகளுக்கு புறம்பாகவும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் , தொலைபேசியில் உரையாடிக் கொண்டும், கவனமின்றியும் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். வீதி விபத்துகளையும்,கொவிட்-19 வைரஸ் பரவலையும் தடுக்கும் வகையிலுமே இந்த விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM