புதிய வகை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை இரத்து செய்துள்ளன.
அதன்படி பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இங்கிலாந்து பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
ஏனைய ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை தடைசெய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஆர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகள் பிரிட்டனுக்கான விமான சேவையை இடை நிறுத்த முடிவுசெய்துள்ளதாக தென் அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளன.
அர்ஜென்டினாவின் உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில், விமான சேவை இடைநீக்கம் தொடங்குவதற்கு முன்பு பிரிட்டனில் இருந்து இறுதி விமானம் திங்கள்கிழமை காலை ப்யூனோஸ் அயர்ஸுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் வரும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, கனடா பிரிட்டனில் இருந்து வருபவர்களின் நுழைவை இடைநிறுத்த தீர்மானம் மேற்கொண்டதாக கூறியிருந்தது.
புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் அதிகரிப்பு காரணமாக லண்டன் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.
ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி பிரிட்டனில் இதுவரை 2,046,161 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 67,503 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM