கிளிநொச்சி மாவட்டத்தில் 1,025 ஏக்கர் நெல் மற்றும் 400 ஏக்கர் மேட்டுநிலப்பயிர் செய்கை என்பன புரெவிப்புயல் காரணமாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அறிமுக உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள புரெவிப்புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி,பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 84 கிராம அலுவலர் பிரிவுகளில் 2122 குடும்பங்களைச்சேர்ந்த 6,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், ஏனைய சேதங்கள் பற்றி குறிப்பிடுகையில், நான்கு வீடுகள் முழுமையாகவும் 280 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக, இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள போகப்பயிர் செய்கையில் 1,025 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், 400 ஏக்கர் மேட்டுநிலச்செய்கைகளையும் 150 ஏக்கர் பழப்பயிர் செய்கையும் 82 ஏக்கர் மரக்கறிச்செய்கை என்பனவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் பாதிப்புக்கள் தொடர்பில் குறிப்பிடுகையில். 483 படகுகள் சேதமடைந்;துள்ளன. 1,173 மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நச்சிக்குடாப்பகுதியில் ஆறு வாடிகளும் பச்சிலைப்பள்ளியில் இரண்டு வாடிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM