போலி பிரான்ஸ் வதிவிட விசாவைப் பயன்படுத்தி கட்டார் வழியாக பிரான்சுக்கு தப்பிச் செல்ல முயன்றமைக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார்.
குறித்த பெண் நேற்றைய தினம் கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ. ஆர் -669 என்ற தோஹா செல்லும் விமானத்தில் புறப்பட விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.
அவர் டிக்கெட் கவுண்டருக்கு (கருமபீடம்) வந்தபோது, அவரது பிரான்ஸ் வதிவிட விசா மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து வைத்தனார்.
பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டூநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியல்கவு திணைக்களத்தின் கண்காணிப்பு பிரிவுக்கு அவரது ஆவணங்களை ஒப்படைத்தனர்.
அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது பிரான்ஸ் வதிவிட விசா போலியானது என நிரூபிக்கப்பட்டது.
அதன் பின்னர் அதிகாரிகள் குறித்த பெண்ணிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் அவர்களது கேள்விகளுக்கு முழுமையான பதில்களை அவர் வழங்கவில்லை.
அதனால் அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM