யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன் ஒருவர் கொழும்புக்கு சென்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கை சேர்ந்த குறித்த மாணவர் வெளிநாடு ஒன்றிற்கு செல்வதற்காக கொழும்பு சென்ற நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பிரகாரம் 5 நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இணையவழி மூலம் மாத்தி்ரமே கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை அவருடன் பழகிய குறித்த 5 பேர் தொடர்பாக சுகாதர பிரிவினர் கவனம் செலுத்தி வருவதுடன், மாணவனை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர் வவுனியாவில் தங்கியிருந்த பகுதிகள் தொடர்பாகவும் சுகாதார பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM