இந்தியாவுக்கு எதிராக அடிலெய்ட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணித் தலைவர் விராட் கோலி,
வேதனையான இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். 60 ஓட்டங்கள் முன்னிலையுடன் வந்து நிலைகுலைந்து போய்விட்டோம்.
முதல் இரு நாட்களில் மேற்கொண்ட கடினமான முயற்சியால் வலுவான நிலையில் இருந்தோம். நேற்றைய தினம் ஒரு மணி நேரத்தில் எங்களால் வெற்றியே பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். சுதாரிப்பதற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
நாங்கள் இன்னும் தீவிரத்தன்மையுடன் துடுப்பாட்டம் செய்திருக்க வேண்டும். முதல் இன்னிங்சில் எப்படி பந்து வீசினார்களோ அதே போல் தான் இந்த இன்னிங்சிலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு இருந்தது.
ஆனால் இன்று (நேற்று) அவசரமாக ரன் சேர்க்கும் மனநிலையில் இருந்ததாக நினைக்கிறேன். ஓட்டம் எடுக்க இருந்த சிரமம்,அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து விட்டது.
எங்களின் உத்வேகம் குறைந்ததும், அவர்கள் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீசியதும் எங்களது வீழ்ச்சிக்கு காரணமாகும். டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதை விட எங்களது மோசமான பேட்டிங் இருக்க முடியாது.
எனவே இங்கிருந்து இனி முன்னோக்கி மட்டுமே செல்ல முடியும். வீரர்கள் தங்களது உண்மையான திறமையை உணர்ந்து அதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.
களத்தடுப்பு சில பிடியெடுப்புகளை நழுவ விட்டதும் பின்னடைவாக அமைந்தது. இல்லாவிட்டால் முதல் இன்னிங்சில் 100 ஓட்டங்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருப்போம்.
இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் எங்கள் வீரர்கள் வலுவாக மீண்டெழுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட்டில் நடைபெற்றது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு தோல்வி அடைந்தது.
குறிப்பாக, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM