(நா.தனுஜா)
உலகநாடுகளுக்கு விலங்குகளின் இறைச்சியை விநியோகிக்கக்கூடியவாறான தொழிற்சாலையொன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறியமுடிகின்றது. இத்தகைய செயற்பாடுகள் இந்த பௌத்த பூமியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு மகாசங்கத்தேரர்கள் ஒருபோதும் அனுமதியளிக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தியிருக்கிறார்.
கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். மாறாக இது நிறுத்தப்படாவிட்டால், தொழிற்சாலை செயற்பட ஆரம்பிக்கும் முதலாவது நாளில் விலங்கு ஒன்றுக்குப் பதிலாக நான் எனது தலையைப் பலிகொடுப்பேன். முதலில் எனது கழுத்தை அறுத்து இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிக்கலாம்.
தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து மீண்டுவர வேண்டுமெனில், இவ்வாறான பாவகாரியங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்படக்கூடாது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நினைத்தால் அதனைச் செய்யலாம்.
நான் களனி தொகுதியில் மாட்டிறைச்சியைத் தடைசெய்தேன். அவ்வாறு மாட்டிறைச்சியை முழுமையாகத் தடைசெய்யுங்கள். அதேபோன்று இறைச்சியை விநியோகிக்கக்கூடியவாறான தொழிற்சாலை இயங்குவதையும் தடைசெய்யுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM