(இராஜதுரை ஹஷான்)
எம்.சி.சி ஒப்பந்தத்திலிருந்து இலங்கை விடுபட்டமை சிறந்த செயற்பாடாகும். நாட்டுக்கு எதிரான ஒப்பந்தத்தில் அரசாங்கம் எப்போதும் கைச்சாத்திடாது எனத் தெரிவித்த சக்திவலுத்துறை அமைச்சர் உதயகம்மன்பில, வெளிவிவகார கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் பொதுத்தன்மையுடன் செயற்படும் என்றும் கூறினார்.
பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
எம்.சி.சி ஒப்பந்தம் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பரிசு பொதி என்றே குறிப்பிட வேண்டும். எனினும் தற்போது அந்த பாரிய பாதிப்பில் இருந்து மீண்டுள்ளோம்.
எம்.சி.சி ஒப்பந்தத்தில் 480 மில்லியன் அபிவிருத்தி நிதி வழங்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் நாட்டுக்கு எதிரான பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை எம்.சி.சி. ஒப்பந்த மீளாய்வு குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் இரகசியமான முறையில் எம்.சி.சி ஒப்பந்தத்தை கைச்சாத்திட முயற்சித்தது. எதிர்கட்சியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் முயற்சிகளை தோற்கடித்தோம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். எம்.சி.சி. ஒப்பந்தத்தால் இலங்கைக்கு நிதி வழங்க மறுக்கப்பட்டுள்ளதால் எவ்வித பாதிப்பும் வெளிவிவகார கொள்கையில் ஏற்படாது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளிவிவகார கொள்கை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் பொதுத்தன்மையுடன் செயற்படும். எந்த நாட்டுக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM