(எம்.மனோசித்ரா)
நத்தார் பண்டிகையன்று வழமையைப் போன்று கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகளை இராணுவத்தினரால் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
இது வரையில் இவ்வாறு 8000 கைதிகள் புனர்வாழ்வுக்கு உ;ட்படுத்தப்பட்டுள்ளனர். இதே வேளை கைதிகளின் குடும்பத்தாருக்கு அல்லது உறவினர்களுக்கு நத்தார் பண்டிகை தினத்தன்று வழமை போன்று அவர்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படுகின்ற வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது வரையில் சிறைச்சாலைகளில் (நேற்று மாலை வரை) 3279 கைதிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 2584 கைதிகளும' , 144 பேர் சிறைச்சாலை அதிகாரிகளுமாவர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 73 அதிகாரிகளும் , 1189 கைதிகளும் குணமடைந்துள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM