( எம்.நியூட்டன் )
யாழ் மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடி தொடர்புடைய 47 மற்றும் 21 வயதுடைய பெண்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் கடந்த புதன்கிழமை பெறப்பட்டு கட்டுநாநக்க ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைப்பட்டன.
அதில் 39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில் நான்காவது சந்தையாக திருநெல்வேலி சந்தையிலும் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM