(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவை பாதுகாப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை செயற்படுத்தாத தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழலில் இருந்து மீள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபை தேர்தல் தற்போதைய அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளாக உள்ளது. மாகாண சபை தேர்தலை 2021 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தேர்தலை எம்முறையில் எடுத்துவதாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்க தயாராக உள்ளோம். கடந்த அரசாங்கம் தேர்தலை எதிர்க் கொள்ளும் அச்சத்தில் தேர்தல் முறைமையில் சிக்கலை ஏற்படுத்தியது.
மாகாண சபை தேர்தல் எத்தேர்தல் முறையில் நடத்தப்பட்டாலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும். யாருக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்பதை மக்களே தீர்மாணிப்பார்கள்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவை பாதுகாப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தனியார் பஸ் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM