(செ.தேன்மொழி)
அரச அதிகாரிகளிடம் போலி தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதுடன் , அவர்களை ஐந்து வருடங்கள் வரை சிறைவைக்கவும் முடியும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகளும், நாடளாவிய ரீதியில் சில கிராமசேவகர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை எந்தளவு முறையாக கடைப்பிடிக்கின்றார்களோ, அதற்கமையவே அந்த பகுதிகளை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.
புதுவருட பிறப்பு இடம்பெறவுள்ள போதிலும், கடந்த வருடங்களைப் போன்று இம்முறை கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
அதனால் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதென்றால் எமது கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் மாத்திரம் இணைந்து கொண்டாடுவதே சிறந்தது. இதேவேளை சுகாதார பிரிவினர் ஏதாவது வேண்டுகோள் விடுத்தால் அதற்கமைய செயற்பட வேண்டியதும் கட்டாயமாகும்.
வைத்தியசாலையில், பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகளுக்காக செல்லும் போது அரச அதிகாரிகள் உங்களது விபரங்களை கேட்பார்களாயின், அவர்களுக்கு உண்மையான விபரங்களையே தெரிவியுங்கள்.
சிலர் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அரச அதிகாரி ஒருவரிடம் போலியான பெயரை அல்லது முகவரியை தெரிவிப்பது குற்றச் செயற்பாடாகும்.
அதற்கமைய போலி பெயரை தெரிவித்தால் அது இன்னுமொரு நபரைப் போன்று தன்னை அடையாளம் படுத்திக் கொண்டமை என்ற குற்றச்சாட்டின் கீழும், ஏதாவது ஆவணம் தயாரிக்கும் போதும் போலியான தகவல்களை வழங்கினால் போலி ஆவணங்களை தயாரித்தமை என்ற குற்றச்சாட்டின் கீழும் அவர்கள் குற்றவாளியாகின்றனர்.
இந்நிலையில் இத்தகைய நபர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்வைத்து தனிமைப்படுத்தல் மற்றும் நோய்தடுப்பு சட்டவிதிகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யமுடியும். அதற்கமைய இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை ஐந்து வருடம் வரை சிறைவைக்கவும் முடியும்.
இதேவேளை வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகளாகும்.
இந்நிலையில் இந்த ஒழுங்கு விதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1,525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டின் எந்த பகுதியில் வசித்து வந்தாலும் நாட்டு மக்கள் அனைவருமே இந்த ஒழுங்கு விதிகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM