(எம்.மனோசித்ரா)
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகமும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்தான 2 மில்லியன் யூரோ பெறுமதியான நிதி உதவி மூலம் இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்கான திறனை அதிகரிக்க உதவுகின்றது.
கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்று நோயைத் தடுத்தல் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இந்த உதவியானது கவனம்செலுத்தப்படும்.
ஒழுங்கமைக்கப்பட்ட நோயாளர் பராமரிப்பு செயல் முறைகளை உருவாக்குவது சிறந்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் முடிவெடுத்தலிற்கு உதவியாக அமையும் அவற்றிற்கு மேலதிகமாக உதவியின் ஒரு முக்கிய பகுதி, கற்றல் செயல்பாட்டு அமைப்பின் முன்னேற்றம் மற்றும் பொது சுகாதார அவசர நிலைகளுக்கு பொறுப்பான சுகாதார அமைப்பின் திறனை எதிர்காலத்தில் நீடிப்பதற்கும் உதவும்.
இந்த நிதியானது ஏற்கனவே உள்ள தகவல் தொடர்பாடல் மற்றும் சமூக செயற்பாட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதோடு தகவல்தொடர்பாடல் சாதனங்களை தரமுயர்த்தலையும் உறுதிசெய்யும். அத்துடன் பாதிக்கப்படக் கூடியநபர்கள், இளைஞர்கள், மற்றும்சமூக அமைப்புகளின் நகர்வுகளை ஊக்குவித்து சமூக அளவிலான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM