(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். மாகாண சபை தேர்தல் உரிமையை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்படவில்லை என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
மாகாண சபை தேர்தல் அரசியல் காரணிகளுக்காகவே பிற்போடப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் மக்களுக்கு தேர்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டமைக்கு கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சமஷ்டியாட்சிக்கு அப்பாற்பட்ட அதிகார பகிர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதன் காரணமாக மாகாண சபை தேர்தல் நடத்தவில்லை. மாகாண சபை தேர்தல் உரிமையை பெற கூட்டமைப்பு உரிய கவனம் செலுத்தவில்லை.
மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்பதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மாகாண சபை முறைமையை பிற்போட முடியாது. மாகாண சபை தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM