மாகாண சபை தேர்தல் உரிமையை பெற கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்படவில்லை - எஸ்.எம்.ரஞ்சித்

Published By: Digital Desk 3

17 Dec, 2020 | 05:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு  நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்புக் கூற வேண்டும். மாகாண சபை தேர்தல் உரிமையை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புடன் செயற்படவில்லை என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித்  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மாகாண சபை தேர்தல் அரசியல் காரணிகளுக்காகவே பிற்போடப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் மக்களுக்கு தேர்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டமைக்கு கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சமஷ்டியாட்சிக்கு அப்பாற்பட்ட அதிகார பகிர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கியதன் காரணமாக மாகாண சபை தேர்தல் நடத்தவில்லை. மாகாண சபை தேர்தல் உரிமையை பெற கூட்டமைப்பு உரிய கவனம் செலுத்தவில்லை.

மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்பதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மாகாண சபை  முறைமையை பிற்போட முடியாது. மாகாண சபை தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்கள். மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55