வலிகாமம் மேற்கு வட்டுக்கோட்டை உப்புவயல் குளம் இராணுவதளபதி சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் வலிகாமம் மேற்கு வட்டுக்கோட்டை உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்றைய தினம் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இராணுவத்தினரால் கடந்த மூன்று மாதமாக புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப் ஜெனரல் சவேந்திர சில்வா திறந்து வைத்தார்.
யாழ் நண்பர்கள் அமைப்பு, வட்டுக்கோட்டை தென்மேற்கு விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM